இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

stalin met senthil balaji - 2026
#image_title

இலாகா இல்லாத அமைச்சர் பதவியுடன் சிறையில் காலம் கழித்து வரும் செந்தில் பாலாஜி, இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் வழிகாட்டலில், கடுமையான நெருக்கடியின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவர் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த போதும், அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடியாயின. இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்ததாகவும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஓர் அமைச்சரை நீக்குவதும் சேர்ப்பதும் நீட்டிக்க வைப்பதும் முதலமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று ஆளும் தரப்பு கூறிவந்தது. இதனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார் செந்தில் பாலாஜி.

ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதன் பின்னணியில் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகிக் கொண்டே வந்தன. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்து வந்த தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த செந்தில் பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றக் காவலை 19வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை செந்தில் பாலாஜி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories