திருவண்ணாமலை பாஜக., வேட்பாளர் அஸ்வத்தாமன் கொடுத்த உறுதிமொழி!

ashvathaman in tiruvannamalai - 2026

விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று, திருவண்ணான்மலை பாஜக., வேட்பாளா் அஸ்வத்தாமன் செய்தியாளர்களிடம் கூறினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலை தொடங்கி, விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக., வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. அவ்வகையில், திருவண்ணாமலை தொகுதிக்கு, பாஜக., வேட்பாளராக அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளராக கட்சித் தலைமையினால் அறிவிக்கப்பட்ட அ.அஸ்வத்தாமன் சனிக்கிழமை நேற்று மாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கிரிவலப் பாதையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக., அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசினாா்.

பின்னர் அவா் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியவை…

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கே கரும்பு, நெல், மணிலா அதிகம் விளைகிறது. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையிலான எந்தத் திட்டமும் மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழிற்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும்.

இங்கே, இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்படும். பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதம்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய எந்தத் தொழிற்சாலையையும் திமுக., மக்களவை உறுப்பினா் கொண்டு வரவில்லை.

இன்று தமிழகமே பாஜக.,வின் கோட்டையாக மாறி வருகிறது. பிரதமர் மோடியின் திட்டங்களின் வாயிலாக, தமிழகத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் உருவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு கொடுக்கின்ற ரூ. 6 ஆயிரம் ஆகட்டும், வீட்டுக்கு குடிநீர் தரும் திட்டம், விவசாயிகளுக்கு என வங்கி கணக்கு ஆரம்பித்தல் என எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை பிரதமர் நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி இருக்கிறது.. என்றார்.

வேட்பாளருக்கு வரவேற்பு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலை நகருக்கு வந்தார்.

அப்போது அவரை பாஜக வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், நாடாளுமன்ற அமைப்பாளர் நேரு, கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கர், திருவண்ணாமலை வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜகவினருடன் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வேட்பாளர் அஸ்வத்தாமன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர் அஸ்வத்தாமன் . கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் அல்லி முத்து , இவருடைய தாத்தா பரசுராம கவுண்டர்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக.,வின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories