மக்களுடன் முதல்வர் வெறும் கண் துடைப்பு திட்டம்; அலைக்கழிக்கப் பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

madurai makkalutan muthalvar prg - 2026
#image_title
  • மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம்
  • முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி
  • மனுக்களை எங்கே கொடுப்பது என, தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்த பொதுமக்கள் !

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது .

இத்திட்டத்தில், கொண்டையம்பட்டி, அழகாபுரி , சின்ன இலந்தைகுளம், கல்வேலிபட்டி மேல சின்னனம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

இந்த முகாமின் நோக்கமானது அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்காக உடனடி தீர்வு காண்பதே மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகும்.

ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற முகாமில் , பல அரசு துறைகளில் அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தது பரிதாபமாக இருந்தது.

மனுக்களை வாங்க உரிய அதிகாரிகள் இல்லாததால், நேரம் ஆக ஆக மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

குறிப்பாக, இந்த முகாமில், பொதுப்பணித்துறை , மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை போன் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காண மனுவை எழுதி கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெரியாமல், மனுவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என, பொதுமக்களும் விவசாயிகளும் கூறினர்.

மக்களை தேடி மருத்துவம் எல்லாம் தேடி கல்வி போன்ற அரசின் எந்த ஒரு திட்டங்களும் பொதுமக்களுக்கு முறையாக பயனளிக்காத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டமும் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories