ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

rajapalayam ration rice - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது: மாவட்ட வட்ட வழங்க அலுவலர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா விற்கு  ராஜபாளையம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் ராஜபாளையம் தனி வட்டாட்சியர் தன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்க அலுவலர் அப்பாதுரை, சிவகாசி வட்ட வழங்க அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கொண்ட குழு ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செல்லும் சாலை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த வழியாக சென்ற TN 21 AZ 0605 என்ற பதிவு எண் கொண்ட அசோக் லைலாண்ட் லாரி நிற்காமல் சென்றுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள்  ஜீப்பில் ஏறி லாரியை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று மடக்கி  பிடித்தனர.

லாரியை சோதனை செய்த பொழுது கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கோழி தீவனம் கொண்டு செல்வதாக போலி பில் தயார் செய்து ரேஷன் அரிசி கடத்தியது  தெரியவந்தது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட லாரியை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில்  திருநெல்வேலி சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வயது 41 என்பதும் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரும் அவர் தான் என தெரிமவந்தது. அவர் கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கடத்தியதை ஒப்புக்கொண்டார் .

மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குழுவினர் தீவிரமாக விசாரணை செய்த பொழுது, ராஜபாளையம் அருகே உள்ள எஸ் .ராமலிங்கபுரத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியது மட்டுமல்லாமல் போலியான பில் மூலம் திருமங்கலத்தில் இருந்து கடத்தி வந்ததாக பொய்யான வாக்கு மூலம் அளித்தது கண்டறியப்பட்டது.

இவருக்கு உடத்தையாக செயல்பட்ட வேல்முருகன் மற்றும் காளிமுத்து ஆகியோரையும் மடக்கி பிடித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையிலான குழுவினர் விருதுநகர் குடிமை பொருள் குற்ற பிரிவு ஆய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories