ஸ்ரீவில்லிபுத்தூர்: மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

srivilliputhur mini bus accident - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து ஒரு மினி பஸ் நேற்று 27ந்தேதி காலை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் வேலைக்கு செல்லும் ஆண் பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் நிதிஷ் மைக்கேல் ராஜ் வயது 45 என்பவர் ஓட்டி வந்தார்.

பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிசாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பஸ்ஸில் பயணம் செய்தோர் அலறி அடித்துக் கொண்டு கூச்சல் போட்டுக்கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இந்த நிலையில் பஸ் கவிழ்ந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ராஜபாளையம் வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் இருந்தும் 108 உயிர் மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. விபத்து வாகன மீட்பு வாகனம் வந்து கவிழ்ந்து கடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தியது

இந்த விபத்தில் மம்சாபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் நிதீஷ் குமார் வயது 16, வாசு ராஜா வயது 14 ஆகியோரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வயது 20, காந்திநகர் மாடசாமி வயது 28 கிருஷ்ணன் கோவில் கல்லூரி ஊழியர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட ஆண் பெண் பஸ் பயணிகள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சாரை சாரையாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்ததாக இவர்கள் நான்கு பேரும் மம்சாபுரம் சுற்று பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

மேலும் இந்த பஸ்ஸில் பயணம் செய்த 30க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் ஆகியோர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இதில் 20 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியபடி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். பஸ் கவிழ்ந்து ஒரே ஊரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories