December 5, 2025, 11:55 AM
26.3 C
Chennai

‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

alankar theatre melappalayam - 2025
#image_title

ரெட்ஜெயண்ட் மூவிஸ் விநியோகத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட நெல்லை தியேட்டரில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டர் வளாகத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை அதிகாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்த தகவல் கிடைத்ததும், சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நெல்லையில் பரபரப்பு நிலவியது. இதனிடையே நெல்லை மாநகரில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் அலங்கார் திரையரங்கில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் திரையரங்கை பார்வையிட்டு உரிமையாளருக்கு ஆறுதல் கூற வந்த இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் கொட்டும் மழையில் கைது செய்யப்பட்டு, அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய காவல்துறை கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியின் குற்றம் சாட்டினர். கடந்த வாரம் இதே பகுதியில் அமரன் திரைப்படத்தினை கண்டித்து அனுமதி இன்றி போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறை, பெட்ரோல் குண்டு வீசி 8 மணி நேரம் ஆகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறை, சம்பவ இடத்தைப் பார்வையிட வந்தவர்களை கைது செய்துள்ளது என்று குற்றம்சாட்டிய இந்துமுன்னணியினர், தாங்கள் கைது செய்து வைக்கப்பட்ட மண்படத்தில் குடிநீர் வசதி கூட செய்து தரப்படாமல் மிகப் பெரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories