பாரத பிரதமர் மோடிக்கு யுஎஸ் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து!

Modi and Trump
#image_title

பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி, இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து பாரதப் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்து குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் 

எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்ப்பிற்கு நன்றி ‘இந்தியா-அமெரிக்க நட்புறவை உலகளவிற்கு எடுத்துச் செல்வோம்.. என்று தெரிவித்துள்ளார். . 

வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்கா இடையே பதற்றமான சூழலும் உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான கருத்துக்களும் எழுந்தன. டிரம்ப் ஒரு படி மேலே போய், இந்தியாவை வீழும் பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். பின்னர் ரஷ்யா சீனாவுடன் கை கோத்து இந்தியா செல்லக் கூடாது என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேச்யில் பேசுவதற்கு மூன்று முறை முயற்சி செய்ததாகவும் ஆனால் பிரதமர் அலுவலகம் அதை தவிர்த்து விட்டதாகவும் ஜெர்மனி இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 

பின் திடீரென ‘நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்’ எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப் . அவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து பதில் அளித்துள்ளார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories