22வது ஆண்டில் பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்..

FB IMG 1751899540884 - 2026

செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரித்து குறைந்த கட்டண மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைத்து பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரயில் பயணம் என்றால் சுகமானது.அதிலும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிப்பது தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிக மிக இயல்பானது.ராத்திரி பயணத்தை துவக்கினால் விடிவதற்கு முன் சென்னை சென்று விடலாம்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் தென்காசி சென்னை இடையே வாரம் ஒருநாள் இயங்கி பின்னர் செங்கோட்டை சென்னை இடையே வாரம் 5 நாள் இயங்கி தற்போது தினசரி ரயிலாக பயணிகளின் ஏகாபித்த ஆதரவுடன் மதுரை கூட்டத்தில் அதிக வருவாயீட்டும் ரயிலாக பொதிகை அதிவிரைவு ரயில் இயங்கி வருகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையடுத்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக இந்த ரயிலுக்கான கொண்டாட்டம் 20/09/25 மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், பொருளாளர் மற்றும் மதுரை ரயில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுந்தரம் , PRO ராமன் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா , செங்கோட்டை அக்ரி ஷேக் , மேலூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி இவ்விழாவிற்கான ஜாங்ரி மற்றும் இரண்டு கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பல ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் ஒரு மணி நேரம் பயண நேரத்தை குறைக்க வேண்டும்.கூடுதலாக சாதாரண பயணிகள் பெட்டி குறைந்த கட்டணத்தில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories