December 5, 2025, 1:06 PM
26.9 C
Chennai

ஸ்ரீவிலி திருவண்ணாமலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

1000959909 - 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சனிக்கிழமை புரட்டாசி சனி வார கருட சேவையும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும்.இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.அதை தொடர்ந்து வரும் ஞாயிறன்றும் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி சனி வார கருட சேவை 20ந்தேதி அதிகாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்பொழுது சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலிலேயே பக்தர்கள் மலையேறி கூட்டம் கூட்டமாக சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி இறக்கியும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை காணிக்கையாக செலுத்திய வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலில் பகல் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் இரவு 8 மணிக்கு சாயரட்ச பூஜையும் நடைபெற்றது. நண்பகல் 12.00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் 4.00 மணிக்கு உற்சவர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் மலையை சுற்றி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதிகளும், செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ் நேரடியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாள் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories