‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

hindumunnani met tn governor - 2026

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி அமைப்பினர் ஆளுநரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.

தமிழக அரசின் தலைவர் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியை இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலைமையில் ஒரு குழு நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், கடந்த சட்டப்பேரவை நடைபெற்ற நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 17.10.25 அன்று எண்:40/2025 என்ற ஒரு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் கோவிலுக்குச் சொந்தமான அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் நிதியில் கல்வி நிறுவனங்கள், இசைப்பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தமிழகத்தில் உள்ள கோவில்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற உள்நோக்கம் கொண்டது என்றும், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்ற கல்வி நிறுவனங்கள் எவையும் முறையாக பராமரிப்பு இன்றியும், நிர்வாகச் சீர்கேடுகளை உடையதாகவும் உள்ளது. இந்த மசோதா காரணமாக மேலும் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோவில் நிதியில் ஊழல் நடைபெறவும் வாய்ப்புள்ளது என்று ஐயம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து பல தீர்ப்புகளும், வழிகாட்டுதல் நடைமுறைகளையும் கூறியுள்ளது. அவற்றையும் மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எண்ணுவது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே மேதகு தமிழக அரசின் தலைவர் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று அந்த ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரங்கள் குறித்து தமிழக தலைவர் ஆளுநர் அவர்களிடம் விசாரித்து அறிந்தார். திருப்பரங்குன்றத்தில் நீதித்துறையை தமிழக அரசு மதிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணான நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில் அரசு செயல்படுவது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை சீர்குலைப்பதாகும்.
இதனால் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். இது மிகுந்த கவலையளிப்பதாகும் என்று ஆளுநரிடம் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

இந்தக் குழுவில் இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories