வரி போரில் டிரம்ப்பை வழிக்குக் கொண்டு வந்த இந்தியா! 18% என இறங்கியது எப்படி?

Modi and Trump
#image_title

50% என இருந்த அமெரிக்க வரிவிதிப்பு, இந்திய பொருள்களுக்கு இனி 18% என குறைக்கப்பட்டு, வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக நேற்று இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல் தனது சமூகத் தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடி இருவரும், நேற்று இரவு தொலைபேசியில் பேசி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக தகவல் வெளியானது.  இதனால் இந்தியத் தரப்பிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஒரு முறை பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்,பாரதத்தின் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பலவீனபடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாது என்று உறுதியுடன் தெரிவித்தார். ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி, அதனால் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், ஏற்கெனவே இருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% சதவீதம் அபராத வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரிவிதிப்பு 50% என உயர்ந்தது.  

இது இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எனினும், அவர்களின் வர்த்தகத்துக்கு மாற்று வழி தேடுவதாக அரசு அறிவித்தது. அதே நேரம், அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வந்தன.  குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தனர். எனினும் பாரத அரசு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தங்களது நிலையை உறுதிப்படுத்தி மெதுவாகவே இழுத்துச் சென்றது. எனவே இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்ற  எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டது. 

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

திடீரென அமெரிக்க நீதிமன்றத்தில் ட்ரம்பின் வரி விதிப்பு சட்ட  பூர்வமானது அல்ல என்று தீர்ப்பெல்லாம் வெளிவந்தது. இது ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது. எனினும் பாரத அரசு நிதானமான போக்கையே கையாண்டது. 

இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாரத அரசு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது. இது ட்ரம்பை பெரிதும் சஞ்சல படுத்தியது.  இந்த ஒப்பந்தம் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.  சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகளால் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய இந்தியா,  தற்போது ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் பெரிதும் சாய்ந்து வருவதாக அமெரிக்காவில் அரசியல் நோக்கர்கள் டிரம்பை எச்சரித்தனர் .

இந்த நிலையில் தான், தான் விதித்த வரிவிதிப்பைக் குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவும் தொடர்ந்து  பேச்சு நடத்தப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.  நேற்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். பிரதமர் மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்த அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

அதில், இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு 25%லிருந்து 18%ஆக குறைக்கப்படுவதாகவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார் இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரி விதிப்பு, 50%த்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இதை அடுத்து,அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 140 கோடி மக்கள் சார்பில் நன்றி என்று பிரதமர் மோடி அந்தப் பதிவில் தெரிவித்தார். 

இந்நிலையில் வழக்கம் போல தான் வெற்றி பெற்றது போல காட்டி கொண்டு டிரம்ப் சோஷியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், பாரத நாட்டுக்கு கொஞ்சமாக வரியைக் குறைத்தேன் 25%ல் இருந்து 18 % ஆகக் குறைத்தேன். மோடி பயந்துகொண்டு நமது நாட்டுப் பொருள்களுக்கு 0% வரி என்று ஒப்புக்கொண்டார் என்றவாறு எழுதி இருக்கிறார்.  மேலும் அமெரிக்கா விற்கும் பொருள்கள் எல்லாவற்றையும் அப்படியே அதிகப்படியாக வாங்கிக் கொள்வேன் என்று மோடி சொல்லிவிட்டார் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் மோடி, வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக, வெறுமனே நன்றி என குறிப்பிட்டார்.  

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.  

இந்த வரிக் குறைப்பால், தொழில் துறைக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  மற்றும் தேசிய பங்குச் சந்தை நிப்டி இன்டெக்ஸ், சராசரியாக இன்று 2.5% ஏற்றம் கண்டன.  அதுபோல், அண்மைக் காலமாக சரிந்து கொண்டே வந்த இந்திய ரூபாய் மதிப்பு, வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சதவீதம் அதிகரித்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.21 என்ற அளவில் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories