January 25, 2025, 1:56 AM
24.9 C
Chennai

இதுக்கு பேர்தான் மதசார்பற்ற அரசு: கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்

நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவு அரசியல் செய்து வருவதாக கூறி வரும் நிலையில் இன்று ரத யாத்திரை குறித்து ஒரு கருத்தை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு’ என்று கமல் கூறியுள்ளார்.

யாருக்கோ சாமரம் வீசுகிறது என்று கூறும் கமல், அந்த யாருக்கோ என்பவர் யார்? என்று கூற தைரியமில்லாமல் டுவீட் போட்டுள்ளார். மேலும் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களை மதியாமல் இருப்பவர்கள் போராட்டம் செய்பவர்கள்தான். அவர்களால்தான் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளாமலும் அவரது டுவீட் உள்ளது.

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக மற்றும் இந்துமத எதிர்ப்பாளராக இருந்தாலும் இந்த ரத யாத்திரையை அனுமதித்து கேரள எல்லையை கடக்கும் வரை பாதுகாப்பு கொடுத்துள்ளார். இதுதான் உண்மையில் மத நல்லிணக்கம். இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறியபோது, ‘இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைச்சர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம் ‘என்று கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ALSO READ:  இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!