கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!

நெல்லை மாவட்டம்  தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு  மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது மாநில தலைவர் அதிகமான் முத்து கூறியதாவது :தலைமை செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது  போல்  3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளி கல்விதுறை நிர்வாக நலன் கருதி மாற்றுதல்கள் வழங்க வேண்டும்.
15-03-2018ம் ஆண்டில் உள்ளவாறு அனைத்து பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி உள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் அனுபவம் இல்லாத மண்டல கணக்கு அலுவலர் பணியிடத்தை பள்ளி கல்வி துறைக்கே வழங்கி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக  நியமனம் செய்திட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை பல பிரிவுகளாக உள்ளதை இணைக்கும் போது அந்த பணிகளை அனைவரும் கண்காணிக்கவும், அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும். ஆகவே  பள்ளி கல்வித்துறையோடு தொடக்க கல்வி துறையை இணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பள்ளி கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலகங்களுக்கு கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தங்களின் கோரிக்கைகள் ஏற்று தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு நடத்திட அனுமதி கேட்டுள்ளோம்.  பேச்சு வார்த்தைக்கு ஒரு மாதத்திற்குள் அழைக்காத பட்சத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம் முன்பு மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த  கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் ஜஸ்டஸ் ஆபிரகாம் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories