பச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு

pachaiyappa - 2026சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், சென்னை பாரிமுனையில் 1842-இல் பச்சையப்பன் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. படிப்படியாக கல்லூரியாக உயர்ந்த இக்கல்வி நிறுவனம், 1940 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இக்கல்லூரியில்தான் கணித மேதை ராமாநுஜன் பி.யு.சி. பயின்றார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திட்டக் கமிஷன் தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் ரங்கா, முரசொலி மாறன் போன்றோர் இந்தக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள்.

1892 நவம்பரில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லான்ஸ்டவுன் பிரபு தலைமையில் கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 1902 நவம்பரில் மெட்ராஸ் கவர்னர் பென்ட்லாண்ட் பிரபு தலைமையில் கல்லூரியின் பவள விழாவும் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நூற்றாண்டு விழா 1942-இல் அன்றைய கவர்னர் சர் ஆர்தர் ஹோப் தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழா, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தலைமையில் 1968 மார்ச் மாதம் கொண்டாடப்பட்டது.

பின்னர் 150-ஆவது ஆண்டு விழா 1994 பிப்ரவரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் புதிய கட்டடங்களை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இப்போது கல்லூரியின் 175-ஆவது ஆண்டு விழா இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories