December 5, 2025, 4:43 PM
27.9 C
Chennai

பச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு

pachaiyappa - 2025சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், சென்னை பாரிமுனையில் 1842-இல் பச்சையப்பன் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. படிப்படியாக கல்லூரியாக உயர்ந்த இக்கல்வி நிறுவனம், 1940 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இக்கல்லூரியில்தான் கணித மேதை ராமாநுஜன் பி.யு.சி. பயின்றார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திட்டக் கமிஷன் தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் ரங்கா, முரசொலி மாறன் போன்றோர் இந்தக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள்.

1892 நவம்பரில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லான்ஸ்டவுன் பிரபு தலைமையில் கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 1902 நவம்பரில் மெட்ராஸ் கவர்னர் பென்ட்லாண்ட் பிரபு தலைமையில் கல்லூரியின் பவள விழாவும் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நூற்றாண்டு விழா 1942-இல் அன்றைய கவர்னர் சர் ஆர்தர் ஹோப் தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழா, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தலைமையில் 1968 மார்ச் மாதம் கொண்டாடப்பட்டது.

பின்னர் 150-ஆவது ஆண்டு விழா 1994 பிப்ரவரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் புதிய கட்டடங்களை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இப்போது கல்லூரியின் 175-ஆவது ஆண்டு விழா இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories