மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி

Published:

pon radhakrishnan - 2026

சென்னை: நீட் தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை கிருஷ்ணசாமி, இன்று காலை அவரை தேர்வு மையத்தில் விட்டு விட்டு வெளியில் வந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை திருத்துறைப்பூண்டி விளாக்குடியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். சற்றுமுன் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயாரிடமும்  மாணவரின் மாமாவிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். கிருஷ்ணசாமி அவர்களின் பிரிவைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கிட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். மாணவர் கஸ்தூரி ராமலிங்கத்தின் மேற்படிப்புக்கு எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கிட முடிவு செய்துள்ளேன். – என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img