மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி

pon radhakrishnan - 2026

சென்னை: நீட் தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை கிருஷ்ணசாமி, இன்று காலை அவரை தேர்வு மையத்தில் விட்டு விட்டு வெளியில் வந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை திருத்துறைப்பூண்டி விளாக்குடியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். சற்றுமுன் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயாரிடமும்  மாணவரின் மாமாவிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். கிருஷ்ணசாமி அவர்களின் பிரிவைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கிட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். மாணவர் கஸ்தூரி ராமலிங்கத்தின் மேற்படிப்புக்கு எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கிட முடிவு செய்துள்ளேன். – என்று தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. It’s very unfortunate that the boy’s father passed away this way, but it just means that his time had come, which is fate over which no human has any control.But the generosity and understanding of Ponnar is really praiseworthy!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories