பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்தநிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.