ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது: காணொளி மூலம் பிரதமரிடம் பெற்ற விருதுநகர் சிறுமி!

vishalini - 2026

புதிய கண்டுபிடிப்புக்காக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை, விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.

2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கும் விழா காணொலி மூலம் நேற்று நடைபெற்றது.

புத்தாக்கம், சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், வீரம் உள்ளிட்டபிரிவுகளின்கீழ் சிறப்பான சாதனை புரிந்த 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுக்காக நாடு முழுவதும் 29 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி விஷாலினியும் ஒருவர்.

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் நரேஷ்குமார், சித்திர கலா ஆகியோரது மகள் விசாலினி(8). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், தனது 6 வயதில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை டி.வி.யில் பார்த்தார். அப்போது வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒரு பலூன் வீட்டை உருவாக்கினார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அதற்கு ‘ஒரு தானியங்கி பல செயல்பாட்டு வாழ்க்கை மீட்பு வெள்ளம் வீடு’ என்ற தலைப்பில் கண்டுபிடிப்பு காப்புரிமை கோரி 2020 செப்டம்பர் 23-ம் தேதி இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதை ஏற்று மத்திய அரசு இவருக்கு 2021 மே 10-ம் தேதி காப்புரிமை வழங்கியது. இது 2020 செப்டம்பர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வகையான வீடுகள் கடல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவரின் இந்த சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022-ன் கீழ் ‘இளைய காப்புரிமை வைத்திருப்பவர்’ என்ற தலைப்பின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இவரது திறமையையும், ஆர்வத்தையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் ‘ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டது.

இந்திய சாதனை பதிவேடுகள் புத்தகத்தில் நாட்டிலேயே 6 வயதில் காப்புரிமை பெற்ற ஒரே சிறுமி விஷாலினி என்றும், மேலும் சர்வதேச அளவில் இளம் வயதில் காப்புரிமை பெற்றவரில் இவர் 2-வது நபர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி அரங்கத்தில் ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறுமி விஷாலினிக்கு விருது வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories