February 20, 2026, 12:16 PM
30 C
Chennai

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

09 May 21 NIPAH - 2026நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் தாக்குதலால், கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரள ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம் என்றும் கூறினார்

நிபா வைரஸ் சில குறிப்பிட்ட வௌவால்கள், ஆந்தை மற்றும் பன்றிகளிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் எச்சில் பண்ண பழம், காய் மற்றும் இலைகளை உண்ணும் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவில் இந்த நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பெரம்பரா, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிபா வைரஸ் தாக்கியவருக்கு முதல் அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்றும், அதன் பின் கடுமையான தலைவலி, காய்ச்சல் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் விரைவில் மூளை காய்ச்சலாக மாறி விடுவதால் இந்த வைரஸ் தாக்கப்பட்ட 75சதவீதம் பேர் உயிரிழந்து விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படும் இடங்களை மத்திய மருத்துவ குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர்.

கேரளாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைப்பகுதியில் வாழும் மக்களுக்கு முன்னேச்சரிக்கை மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தை பொறுத்துவரை நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories