சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய படை பாதுகாப்பு கோரிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக போலீஸார் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சோதனை அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும். இதுதொடர்பாக மத்திய – மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.



