தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஜெயிலுக்கு போவார்: சுப்பிரமணியன் சுவாமி

Published:

 
தமிழக முதலமைச்சர் மீண்டும் ஜெயலலிதா சிறைக்கு போவார் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
 
நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு வந்த சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் வருகிற 2016 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். இதை தேசிய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
 
1½ ஆண்டுகால மோடி ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. அதிமுக, திமுக கட்சிகள் ஊழல்கட்சிகள்.
 
தமிழ்நாட்டில் இந்து மறு மலர்ச்சி ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் பாஜக வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
 
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விவாதம் வருகிற 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தொடங்குகிறது. பிப்ரவரியில் தீர்ப்பு வரும்
 
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும். மீண்டும் தமிழக ஜெயலலிதா சிறைக்குப் போவார் என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img