குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

IMG 20180619 WA0011 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாதக் கடைசியிலேயே தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரு வாரங்களுக்கும் மேலாக, மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குற்றால சீசனின் அடையாளமான சாரலும், குளுமையான தென்றல் காற்றும் அவ்வப்போது தலை காட்டும் பலத்த மழையும் பெய்து வருவதால், மிகவும் இதமான சூழலை பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால், வரிசையில் நிறுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப் படுகிறார்கள். ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுவதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றார்கள். மிகவும் பாதுகாப்பாகக் குளித்து மகிழும் சிறார்களுக்கான அருவியான புலியருவியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய குற்றாலம் அருவியில் பரந்து விழும் நீரில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

குற்றாலம், ஐந்தருவியில் குளித்து விட்டு, அருகில் உள்ள எக்கோ பார்க் மற்றும் படகுக் குழாமில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரம் போக்கி வருகின்றனர். படகுகளில் பயணிக்க ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories