குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

IMG 20180619 WA0011 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாதக் கடைசியிலேயே தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரு வாரங்களுக்கும் மேலாக, மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குற்றால சீசனின் அடையாளமான சாரலும், குளுமையான தென்றல் காற்றும் அவ்வப்போது தலை காட்டும் பலத்த மழையும் பெய்து வருவதால், மிகவும் இதமான சூழலை பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால், வரிசையில் நிறுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப் படுகிறார்கள். ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுவதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றார்கள். மிகவும் பாதுகாப்பாகக் குளித்து மகிழும் சிறார்களுக்கான அருவியான புலியருவியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய குற்றாலம் அருவியில் பரந்து விழும் நீரில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

குற்றாலம், ஐந்தருவியில் குளித்து விட்டு, அருகில் உள்ள எக்கோ பார்க் மற்றும் படகுக் குழாமில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரம் போக்கி வருகின்றனர். படகுகளில் பயணிக்க ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories