புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published:

19 July16 god1 - 2026அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் கென்னடி மறையுரையாற்றுகிறார். இரவு ‘புனித அருளானந்தர் நாடகம்’ நடைபெறுகிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி காலையில் திருப்பலியை தொடர்ந்து, குடும்ப வளர்வாழ்வு பயிற்சி நடக்கிறது.

வருகிற 25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு தேர் பவனி நடக்கிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் ரீத்தாபுரம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்குகிறார். திருமூலநகர் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் எட்வர்ட் டொமினிக் ராஜன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் லீலா, பொருளாளர் லலிதா, பங்கு பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img