December 6, 2025, 8:43 AM
23.8 C
Chennai

ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

p ravindranath - 2025

தேனி எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் !! இந்து தமிழர் கட்சி கண்டனம்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய ஓ பி ரவீந்திரநாத் குமார் எம் பி அவர்கள் மீது கம்பத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அடிப்படைவாத குழுக்களில் தூண்டுதலில் காரணமாக சிஏஏ சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆதரவாகப் பேசிய காரணத்தால் திரு ரவீந்திரநாத் குமார் கட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பும்சூழ்நிலையில் காவல்துறை பாதுகாப்பு இருக்கும் நிலையில்கருப்புக்கொடி காண்பித்து கூட்டமாக சேர்ந்து மிரட்டி கார் மீது தாக்குதல் நடத்தி “முர்தாபாத்” என்று அதாவது ஒழிக என்று தூய தமிழில் கோஷம் போட்டு இருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் நேரடியாக சந்தித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கண்டனத்தை, எதிர் கருத்தை சொல்வதற்கு ஜனநாயகத்தில் முழு உரிமை இருக்கிறது.

அதை விட்டுவிட்டு இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இவர்கள் தவறான நபர்களின் வழிகாட்டுதல் காரணமாக இதுபோன்று எதிர்மறை செயல்களில் எதிர்வினை செயல்களில் ஈடுபடுவது சரியானதாக தெரியவில்லை.

இந்து தமிழர் கட்சியின் சார்பில் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கம்பத்தில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்களின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் சட்டவிரோத, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து இந்து மத நம்பிக்கை யாளர்களை அச்சுறுத்தக்கூடிய, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யக்கூடிய, கொடுஞ்செயல்கள் பல நடந்திருக்கிறது. என்பது கடந்தகால வரலாறு.

இதை மனதில் கொண்டு திரு ரவீந்திரநாத் குமார் எம்பி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை சாதாரண ஒரு கருப்புக். கொடி ஆர்ப்பாட்டமாக காவல்துறை கணக்கிட கூடாது!!

நாளை ஒரு பெரிய அசம்பாவித செயல்களுக்கான முன்னோட்டமாகவே எச்சரிக்கை உணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்
கொள்கிறோம்.

காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களை சுட்டுக் கொன்றவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!

திமுக எஸ்டிபிஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா… உள்ளிட்ட பல இயக்கங்கள் பாரத அரசு கொண்டுவந்த குடியுரிமை பதிவு சம்பந்தமான சட்ட திட்டத்தை பற்றி மக்களிடம் தவறான புரிதல் உருவாக்கிட, எதிர்மறை ,அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

அது போன்ற நபர்களை கைது செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட மத அடிப்படைவாத பழமைவாத குழுக்களை தடை செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… – என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories