சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்; வருமான வரித்துறை அதிரடி வேட்டை

Published:

gold rupee recovered - 2026

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

போயஸ்கார்டன் பகுதியில், தீபக் என்பவர் வீட்டில் 28 கோடி ரூபாயும், பெசன்ட் நகரில் ஒரு இடத்தில் 24 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனையில், மொத்தம் 120 கோடி ரூபாய் வரை பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை கொள்முதல் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, தற்போதைய இந்த சோதனை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்து, சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சென்னை உட்பட 30 இடங்களில் வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img