ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!

sandeep nanduri - 2026

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் படி 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை ஆய்வு மேற்கொள்ள வருகிறது. இந்தக் குழு ஆய்வு மேற்கொண்ட பின்னர்  பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

இது குறித்து விளக்கம் அளிக்க,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் குழு இன்று மாலை தூத்துக்குடி வருகிறது.  ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை கொட்டும் இடத்தை வல்லுநர் குழு இன்று மாலை பார்வையிட உள்ளது.

நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இது  குறித்து ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப் படும். மேலும் ஸ்டெர்லைட் வழக்குகளில் தொடர்புடையவர்களும், சம்மந்தப்பட்ட தரப்புகளும் பங்கேற்கும் வகையில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்றார்.

இதனிடையே, தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவைச் சார்ந்த வழக்கறிஞர் விமல் ராஜேஷ், மற்றும் ஸ்டீபன் தாஸ், துரைபாண்டியன் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னரும் அனல்மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்கள் பலவற்றில் காற்றுடன் மாசு புகைமண்டலம் படிந்து துர்நாற்றத்துடன் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அப்படியென்றால் சுற்றுச்சூழல் மாசடைய இன்னும் பல தொழிற்சாலைகள் காரணமாக உள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. எனவே, மத்திய ஆய்வுக்குழுவினர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் மாசுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால்தான் மாசற்ற மற்றும் மக்கள் சுகாதாரமாக வாழக்கூடிய சுற்றுச்சூழல் ஏற்படும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, மத்தியக் குழுவினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி நாங்கள் மத்திய ஆய்வுக்குழுவிடம் மனு அளிக்கவுள்ளோம் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories