December 6, 2025, 4:13 AM
24.9 C
Chennai

நள்ளிரவில் பரபரப்பு: சுற்றுலா பயணியர் வேன் டிரைவரை அடித்து வனத்துறையினர் அட்டகாசம்!

sorimuthu aiyanar - 2025

நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் சுமார் நாற்பது வேன்களில் 600-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அங்கே சென்று இரவில் தங்கி உள்ளனர் மாலை சுமார் 6 மணிக்கு மேல் வேன்கள் அனைத்தையும் கீழே செல்லுமாறு வனக் காவலர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வேன் டிரைவர்கள் இரவு நேரம் ஆகிவிட்டபடியால் நாளை கோவிலில் இருப்பவர்கள் மாலை கீழே இறங்கி விடுவார். எனவே இன்று இரவு மட்டும் தங்குவதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப் படவே, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு டிரைவர் வனக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட, இதை அடுத்து அனைத்து ஓட்டுநர்களும் காவல் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மணிமுத்தாறு காவல்துறையினர் விரைவாக அங்கு வந்து இரு தரப்புக்கும் இடையே  சமாதானம் செய்து வைத்து, வேன் டிரைவர்கள் அனைவரும் நாளை காலை இங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம் என்று கூறிய பின்னர், அனைத்து வேன் டிரைவர்களும் தங்களுடைய வாகனங்களை பாபநாசம் செக் போஸ்ட் அருகே நிறுத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories