தாமிரபரணி புஷ்கரம்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் விழிப்பு உணர்வு யாத்திரை!

Published:

pushkara yatra - 2026

சென்னை: தாமிரபரணி புஷ்கரத்தை  முன்னிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத், ஒரு விழிப்பு உணர்வு ரத யாத்திரையை நடத்துகிறது.

வரும் அக்.8 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்படுகிறது தாமிரபரணி புஷ்கர பிரதான ரதம். அக். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு ரதம் புறப்படும் இந்த நிகழ்வின் போது, பல்வேறு முக்கிய ஆன்மீக அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ரதயாத்திரை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் துவங்கி புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றைக் கடந்து தாம்பரம் சென்றடையும்.

மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் வண்டலூர் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், செங்கல்பட்டு மாமண்டூர், படாளம், கருங்குழி, மதுராந்தகம் வழியாக மேல்மருவத்தூரை சென்றடையும்.

ரத யாத்திரையுடன் சென்று புஷ்கரத்தில் சேவை புரிய விரும்புவோர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு சேவைப் பணிகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

சு.வெ.ராமன் விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்புச் செயலாளர் . 7373870696 / 7904179287.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img