தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்

n1ellai hrncejcvisit - 2026

நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.

வெள்ளக் காலம் என்பதால், தாமிரபரணியில் ஏற்படும் வெள்ளத்தால் அசம்பாவிதம் நேரலாம் என்று கருதுவதால், தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்த முடிவைபரிசீலனை செய்வதாகக் கூறினார் ஆட்சியர்.

ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையத் தலைவர் புலவர் மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவில் காலா காலமாக தாமிரபரணி புஷ்கர விழா புனித நீராடல் எல்லா படித்துறைகளிலும் எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமாக நடந்துவருகின்றது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அதிக வாகனங்களால் நிறுத்துமிடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மாஞ்சோலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் போல் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்றெல்லாம் வீண் காரணங்களைக் கூறி இப்படி தடை செய்வது சரியில்லை. 140 படித்துறைகளில் புனித நீராடல் நடக்கும் என்பதால் இந்த இரு படித்துறைகளில் பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிவார்கள் என்று கூற முடியாது.

நெல்லையப்பர் காந்திமதியம்மன் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறும் தைப்பூச படித்துறையில் புனித நீராட தடை விதித்திருப்பது மத உரிமைகளுக்கு எதிரானது, சட்ட விரோதமானது என்று கூறி யிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மகாராஜன், பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் நலன் கருதியே தடை விதிக்கப் பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், தடையை நீக்க முடியாது என்று கூறினார்.

இதை அடுத்து இந்த வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

இதனிடையே, இன்று முற்பகல் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்து ஆய்வு செய்தார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி. தொடர்ந்து அங்கிருப்பவர்களிடம் பேசிய அவர், இங்கே ஜபம், பாராயணம் மட்டும் செய்யலாம், கோயிலில் ஹோமம் முதலானவற்றை வைத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு குறைந்த கால அளவில் முடியுமோ அப்படி செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஒரு நாளுக்குப் போதாதா… என்று கூறிவிட்டுச் சென்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories