தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்

n1ellai hrncejcvisit - 2026

நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.

வெள்ளக் காலம் என்பதால், தாமிரபரணியில் ஏற்படும் வெள்ளத்தால் அசம்பாவிதம் நேரலாம் என்று கருதுவதால், தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்த முடிவைபரிசீலனை செய்வதாகக் கூறினார் ஆட்சியர்.

ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையத் தலைவர் புலவர் மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவில் காலா காலமாக தாமிரபரணி புஷ்கர விழா புனித நீராடல் எல்லா படித்துறைகளிலும் எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமாக நடந்துவருகின்றது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அதிக வாகனங்களால் நிறுத்துமிடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மாஞ்சோலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் போல் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்றெல்லாம் வீண் காரணங்களைக் கூறி இப்படி தடை செய்வது சரியில்லை. 140 படித்துறைகளில் புனித நீராடல் நடக்கும் என்பதால் இந்த இரு படித்துறைகளில் பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிவார்கள் என்று கூற முடியாது.

நெல்லையப்பர் காந்திமதியம்மன் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறும் தைப்பூச படித்துறையில் புனித நீராட தடை விதித்திருப்பது மத உரிமைகளுக்கு எதிரானது, சட்ட விரோதமானது என்று கூறி யிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மகாராஜன், பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் நலன் கருதியே தடை விதிக்கப் பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், தடையை நீக்க முடியாது என்று கூறினார்.

இதை அடுத்து இந்த வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

இதனிடையே, இன்று முற்பகல் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்து ஆய்வு செய்தார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி. தொடர்ந்து அங்கிருப்பவர்களிடம் பேசிய அவர், இங்கே ஜபம், பாராயணம் மட்டும் செய்யலாம், கோயிலில் ஹோமம் முதலானவற்றை வைத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு குறைந்த கால அளவில் முடியுமோ அப்படி செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஒரு நாளுக்குப் போதாதா… என்று கூறிவிட்டுச் சென்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories