தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்

n1ellai hrncejcvisit - 2026

நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.

வெள்ளக் காலம் என்பதால், தாமிரபரணியில் ஏற்படும் வெள்ளத்தால் அசம்பாவிதம் நேரலாம் என்று கருதுவதால், தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்த முடிவைபரிசீலனை செய்வதாகக் கூறினார் ஆட்சியர்.

ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையத் தலைவர் புலவர் மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவில் காலா காலமாக தாமிரபரணி புஷ்கர விழா புனித நீராடல் எல்லா படித்துறைகளிலும் எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமாக நடந்துவருகின்றது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அதிக வாகனங்களால் நிறுத்துமிடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மாஞ்சோலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் போல் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்றெல்லாம் வீண் காரணங்களைக் கூறி இப்படி தடை செய்வது சரியில்லை. 140 படித்துறைகளில் புனித நீராடல் நடக்கும் என்பதால் இந்த இரு படித்துறைகளில் பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிவார்கள் என்று கூற முடியாது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

நெல்லையப்பர் காந்திமதியம்மன் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறும் தைப்பூச படித்துறையில் புனித நீராட தடை விதித்திருப்பது மத உரிமைகளுக்கு எதிரானது, சட்ட விரோதமானது என்று கூறி யிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மகாராஜன், பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் நலன் கருதியே தடை விதிக்கப் பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், தடையை நீக்க முடியாது என்று கூறினார்.

இதை அடுத்து இந்த வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

இதனிடையே, இன்று முற்பகல் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்து ஆய்வு செய்தார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி. தொடர்ந்து அங்கிருப்பவர்களிடம் பேசிய அவர், இங்கே ஜபம், பாராயணம் மட்டும் செய்யலாம், கோயிலில் ஹோமம் முதலானவற்றை வைத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு குறைந்த கால அளவில் முடியுமோ அப்படி செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஒரு நாளுக்குப் போதாதா… என்று கூறிவிட்டுச் சென்றார்.

 

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories