மதுரை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அறநிலையத்துறை ஆணையர், செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



