December 5, 2025, 2:48 PM
26.9 C
Chennai

டெங்கு… அச்சம் வேண்டாம்! ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் காப்பாற்றிவிடலாம்!

radhakrishnan J - 2025

டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,  டெங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்!

மேலும், காய்ச்சல் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், “தினமும் சுமார் 20 பேர் வரை டெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர். பன்றிக்காய்ச்சலை தடுக்க மக்கள் கண்டிப்பாக கையை சுத்தமாக கழுவ வேண்டும்” என்றார்.

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியவை….

* இந்தியா முழுவதும் 8,025 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது

* பன்றிக் காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் 625 பேரும், தமிழகத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* காய்ச்சலால் ஒருவர் இறப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்!

* வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! சுகாதாரப்பணிகளை ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

* உறுப்பு மாற்று சிகிச்சைகளில் வெளிநாட்டினர் மட்டுமே பயன் பெறுவதாக கூறுவது தவறு.

* வகையான மாற்று அறுவை சிகிச்சைகளில் 13 உறுப்புகள் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன!

* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது… – என்று கூறினார், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.

இதனிடையே, டெங்கு கொசு உற்பத்தி மையங்களாக செயல்படும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. சிப்காட்டில் டைமலர் கனரக ஆலையின் கட்டுமான பிரிவில் ஆய்வு செய்த பின் ஆட்சியர் நடவடிக்கை  எடுத்தார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது திருப்பூர் மாநகராட்சி.  அரசு போக்குவரத்து பணிமனை கிளை 1 , கிளை 2 க்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது திருப்பூர் மாநகராட்சி. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதால் அபராதம் விதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories