இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

புது தில்லி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், சனிக்கிழமை காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் தில்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது முழுப் பெயர் அர்தேந்து பூஷண் பரதன்.

92 வயதான ஏ.பி. பரதனுக்கு, கடந்த 7ஆம் தேதி திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை சனிக்கிழமை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சனிக்கிழமை இரவு 8.20 மணி அளவில் அவர் மரணமடைந்ததாக ஜி.பி.பந்த் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநர் வினோத் புரி தெரிவித்தார்.

திங்கள்கிழமை நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஏ.பி.பரதன், தேசிய அரசியலில் வருவதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வியாபாரிகள் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், அந்த மாநில இடதுசாரித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் உருவெடுத்தார்.

தேசிய அரசியலுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வந்த ஏ.பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மேலும், இந்திரஜித் குப்தாவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தார்.

மறைந்த ஏ.பி.பரதனுக்கு அசோக் என்ற மகனும், அல்கா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி, கடந்த 1986-ஆம் ஆண்டில் மரணமடைந்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories