spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர 12,624 சிறப்புப் பேருந்துகள்: ஜெயலலிதா அறிவிப்பு

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர 12,624 சிறப்புப் பேருந்துகள்: ஜெயலலிதா அறிவிப்பு

- Advertisement -

சென்னை:
பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன.

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற் றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை யட்டி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்து களை இயக்க நான் உத்தர விட்டுள்ளேன்.

அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத் திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9.1.2016 அன்று 482 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 504 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 365 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 539 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 1,345 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 1,447 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இது தவிர மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து 9.1.2016 அன்று 516 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 608 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 621 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 892 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 2,080 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 3,225 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.மொத்தத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 9.1.2016 முதல் 14.1.2016 வரை 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 15.1.2016 முதல் 19.1.2016 வரை இயக்கப்படும்.

மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காணும் பொங்கல் நாளான 17.1.2016 அன்று மெரினா கடற்கரை, வண்டலூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் ஷ்ஷ்ஷ்.tஸீstநீ.வீஸீ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள லாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe