ஈரான் தூதரகம் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக சவுதி கூட்டணி அறிவிப்பு

Published:

 
சவுதி அரேபியா கூட்டணி ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துஉள்ள தகவல் தொடர்பாக விசாரித்து வருவதாக அறிவித்து உள்ளது.
சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை சவுதி அரேபியா நிறைவேற்றியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரெட்சும், குவைத் மற்றும் பக்ரைன், சூடான் , கர்த்தார், ஈரானில் இருந்து தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெற்று உள்ளது. சவுதி அரேபியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்நாடுகள் தூதர்களை திரும்ப பெற்று உள்ளது.
இந்நிலையில் சனாவில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து சவுதி அரபியா கூட்டணி படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டிஉள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏமனில் உள்ள சவுதி அரேபியா கூட்டணி விசாரித்து வருகிறது என்று கூட்டணிபடையின் செய்தித் தொடர்பளர் அகமது அஸ்செரி கூறிஉள்ளார்.
சனாவில் கூட்டணிபடை போர் விமானங்கள் நேற்று இரவு கடும் தாக்குதல்களை நடத்தியது, சவுதி அரேபியாவின் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை லாஞ்சர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் தூதரகங்கள் உள்பட உள்கட்டமைப்பு நிறைந்த கட்டிடங்களை பயன்படுத்துகின்றனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தகவலின்படி, ஈரான் குற்றச்சாட்டை சுமத்திஉள்ளது, அதில் நம்பகத்தன்மை இல்லை.என்றும் கூறியுள்ளார்.
ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்திவருகிறது என்பது குறிப்பிட தக்கத்து
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img