ஜல்லிக்கட்டு பற்றி நக்மாவுக்கு எதுவும் தெரியாது : ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published:

 
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மாவுக்கு எதுவும் தெரியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விளையாட்டு விலங்குகள் நலவாரியத்தின் சட்ட போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விழுந்துள்ளது.
 
அதை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.ல் தேசிய கட்சிகளின் தமிழக நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகளின் கருத்துக்கள் வேறுபடுவது உண்டு.அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை நக்மா ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளார்.
 
கடந்த வாரம் மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நக்மா ‘ஜல்லிக்கட்டு நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை. மாடுகளை வதைப்பதற்கு சமம்’ என்று கருத்து தெரிவித்தார்.இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, நக்மாவுக்கு ‘பாட்ஷா’வை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியவில்லை.
காங்கிரசை பொறுத்தவரை மன்மோகன்சிங், ஜெய்ராம் ரமேஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான எண்ணம் கொண்டுள்ளார்கள்.காங்கிரசில் குஷ்புவும், நக்மாவும் தனி தனியாகவுவும், குஷ்பு இளங்கோவனின் ஆதரவாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இளங்கோவன் நக்மாவை சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img