பைக் மீது பாய்ந்த புலி…! இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ!

Published:

tiger youhs - 2026

ஜஸ்ட் மிஸ்…! நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.

புதரில் மறைந்திருந்த ஒரு சிறுத்தைப் புலி திடீரென்று ஒரேயடியாக அவர்கள் மீது பாய்ந்தது. அந்நேரத்தில் பைக் வேகமாக சென்று கொண்டிருந்ததால் அந்தப் புலியின் குறி தவறியது .

இந்த எதிர்பாராத சம்பவத்தால் அந்த இளைஞர்கள் ஆடிப் போயினர். உடனே நிறுத்தாமல் படு வேகமாக அங்கிருந்து பைக்கில் பறந்தனர்.

பாய்ந்த புலியும் அவர்களை திரும்ப வந்து தாக்காமல் தன் வழியே சென்று விட்டது. இந்த திகில் வீடியோவை இந்தியன் வன இலாகா அதிகாரி சுஷாந்த் நந்தா ட்வீட் செய்துள்ளார்.

ஒரே கணத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி விட்டது. ஆனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

அந்த வழியில் காரில் பயணித்தவர்கள் யாரோ இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்.

புதரில் நின்றிருந்த புலியை பார்த்து காரை நிறுத்தி வீடியோ எடுக்கும் போது இரு இளைஞர்கள் பைக் மீது அவ்வழியே சென்றார்கள். புலி அவர்கள் மீது பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பித்து உயிர் பிழைத்தார்கள்!

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img