தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு !

 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.
 
நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பாலமேட்டில் ஏராளமானோர் கருப்புச்சின்னம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வாடிவாசல் முன்பு குவிந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினார்கள். விலங்குகள் நல அமைப்பின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. வாடிவாசல் பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதே போன்று, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டி சில நிமிடம் அமைதி வழிபாடு நடத்தினர். வாடிவாசல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை கருப்பு கொடியுடன் அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
 
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நேற்று 5-வது நாளாக அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. அழகர்கோவில் அருகில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டியில் சிலர் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றில் கட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டனர்.
 
இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். காவல் துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் இணைந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காளைகளுடன் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தங்கள் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக கொண்டு செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
 
இதுதொடர்பாக 10 பேரை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவனியாபுரம் பகுதியில் ஒரு நகர பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் ஜல்லிக்கட்டு பேரவையினர் கருப்பு கொடி பேரணி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், குதிரை, ரேக்ளா வண்டிகளும் கலந்து கொண்டன. பேருந்து நிலையத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கலைந்து போகும்படி கூறினார்கள். அங்கிருந்து ஊருக்குள் சென்ற அவர்கள் தடையை மீறி எருது விட்டு வீரவிளையாட்டில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போல், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டும் பிரசித்தி பெற்றதாகும்.
 
நேற்று சிங்கம்புணரியில் தடையை மீறி சுற்றுவட்டார கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த துண்டு, ரூபாய் நோட்டு மாலை, கரும்பு ஆகியவற்றை எடுக்க மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று காளைகளின் கழுத்தில் கரும்பு, ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்து அவிழ்த்துவிட்டனர். ஏராளமான கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தடையை மீறி நடந்தன.
 
நூற்றுக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கினர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். இதேபோல், வேலூரை அடுத்த சாத்துமதுரை பகுதியிலும் காளை விடும் திருவிழா உற்சாகமாக நடந்தது .இதனால் விருதம்பட்டு பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
 
இதனால் காளைகள் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி, விருதம்பட்டு திடலில் நேற்று மாலை காளை விடும் திருவிழா நடந்தது. காளைகளை ஓடவிட்டு அதன் பின்னே இளைஞர்கள் விரட்டிக்கொண்டு ஓடினர். பெரும்பாலான காளைகள் சீறிப்பாய்ந்து இளைஞர்களை கீழே தள்ளிவிட்டு வேகமாக ஓடிவிட்டன. இந்த காளை விடும் விழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories