தஞ்சை… சாமி கோயிலை தங்கள் வீடு ஆக்கிக் கொள்வதா?! ஆக்கிரமிப்பை எதிர்த்து குமுறும் பக்தர்கள்!

tanjoretemple3 horz - 2026

சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள் – தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ் மிக்க தஞ்சாவூரில் தான் இந்த கொடுமை.

அறநிலையத்துறை, காசுக்கு மட்டுமே கணக்கு பார்த்து, வருமானம் வரும் கோயில்களை மட்டுமே கவனத்தில் கொள்வதால், வருவாய் குறைந்த கோயில்கள் பராமரிப்பு இன்றி பாழ்பட்டுக் கிடக்கின்றன. அவற்றில் சமூக விரோதிகள் குடியேறுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழ்ந்தும் வருகிறார்கள்.

tanjoretemple2 - 2026

இப்படிப்பட்ட துர்பாக்கிய நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் சில சிவ ஆலயங்கள் உள்ளன. ஆனால் இதே போன்றதொரு நிலைமை, தஞ்சை மாவட்டத்திலும், அதுவும் குறிப்பாக தஞ்சாவூரிலேயே இருப்பது மிகவும் கொடூரமானது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் நம்மிடம் விவரித்தவை…

இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியத்தால், ஆக்கிரமிப்பாளர்களின் அபகரிக்கும் நோக்கத்தால், கையெடுத்து வணங்க கூடிய தெய்வங்கள் வாழ்ந்த இந்து திருக்கோயில் இன்று ஆக்கிரமிப்பு பேர்வழிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கோயிலையே கொள்ளையடித்து குடும்பம் நடத்தும் வீடாக மாற்றிய கொடுமையை என்னவென்று சொல்வது?

tanjoretemple5 - 2026

தஞ்சை மாநகரம் தெற்கு அலங்கம் தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உயர்ந்து நின்ற கோபுரம் குட்டிச்சுவர் ஆகவும், லையம்சம் பொருந்திய சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் சிதில மடைந்தும் இந்த சமூக விரோதிகளால் மறைக்கப்படும் சிதைக்கப்பட்டும் இருக்கிறது.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

துவார பாலகர்கள் என்று சொல்லக்கூடிய வாயிற்காவலர்கள் கோயிலுக்கு முன்பாக தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆக்கிரமித்த பேர்வழியின் வீட்டின் பாதுகாப்புக்கு வாட்ச்மேன் தேவையில்லை. ஏனென்று சொன்னால் கோயிலிலேயே பாதுகாத்த துவார பாலகர்கள் இன்று இவருடைய வீட்டிற்கும் வாயிற்காவலன் ஆக இருக்கிறார்.

பிள்ளையார் ,சந்திரன் சூரியன் போன்ற கலையம்சம் பொருந்திய கற்சிற்பங்கள் எல்லாம் கண் முன் அழிந்து கொண்டிருக்கும் கொடுமை! இதனைக் கண்டுகொள்ளாத அறநிலையத்துறையை நினைத்தால் ஏழு ஜென்மத்துக்கும் திருந்துவார்களா என்று தெரியவில்லை.

மன்னர்கள் கட்டிய கோயிலை நம்மவர்கள் ஆக்கிரமித்து அனுபவிக்க நினைப்பது பாவத்திலும் பெரிய பாவம். இந்தப் பாவிகளுக்கு தெரியவில்லை.

tanjoretemple4 - 2026

நாங்கள் இந்தப் பகுதிக்கு சென்று விசாரித்தோம். ஆக்கிரமிப்பு பேர்வழிகள் சொன்னதைக் கேட்டால் எங்களுக்கு மயக்கமே வந்தது. இது எங்களுடைய வீடு. வீட்டை நாங்கள் கோயில் மாடலில் கட்டி இருக்கிறோம் என்று, அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் போல உண்மை பேசுகிறார்கள்.

கோயிலையே ஆக்கிரமித்து கட்டி இருக்கக்கூடிய இந்த வீட்டிற்கு மின்சாரத்துறை எப்படி மின்சாரம் வழங்கியது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இவ்வளவு பெரிய கோவில் காணாமல் போய் கண்டுகொள்ளாத அறநிலைய துறையை என்ன செய்வது?

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக இங்கே குறிப்பிட்ட இந்த திருக்கோயிலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மீண்டும் வழிபாட்டுக்குரிய இந்து சமய திருக்கோயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .

tanjoretemple1 - 2026

மேலும் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பது குறித்தான முழு விசாரணை மேற்கொண்டு இந்தக் கோயிலையும் கோயில் சொத்துக்களை மீட்பதற்கு உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால் அன்பர்களைத் திரட்டி நம் திருக்கோவிலை மீட்கும் புனிதப் பணியை மேற்கொள்வோம். இதற்காக இந்து மக்கள் கட்சி, நீதிமன்றத்திலும் போராடும்! இதனை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் .

கோயிலே காணாமல் போகும்போது கண்டு கொள்ளாத அறநிலைய துறை அதிகாரிகளா, கோயில்கள் சுவாமி சிலைகளைப் பாதுகாக்கப் போகிறார்கள்? என்றார் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த நபர் – என்றார் ராம. ரவிக்குமார்!

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?! அல்லது அன்பர்கள் துறைதான் களத்தில் இறங்க வேண்டுமா?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories