புளியரை எஸ் வளைவு அருகே… ஒருவழியா ரோடு சரியாச்சு!

Published:

photo senkottai - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில், கேரள மாநில எல்லைப் பகுதியில் புகழ்பெற்ற எஸ் வளைவு கடந்து ரயில்வே பாலத்தை அடுத்து வரும் போது, வாகனங்கள் திக்கித் திணறி தடுமாறும். காரணம், சாலையில் உள்ள மரணப் பள்ளங்கள்.

பல நாட்களாக இந்தப் பள்ளங்களைச் சரி செய்யுமாறு பலரும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்தப் பள்ளங்களை மூடுவதற்கு போலீஸார் தாங்களாவே முயற்சி மேற்கொண்டனர்.

செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் பாபு ஆகியோரது முயற்சியால் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள சேதமடைந்த சாலைகள் பொதுமக்கள் உதவியுடன் செப்பனிடப் பட்டன. அங்கே காங்கிரீட் தளங்கள் அமைத்து ரூபாய் 60,000 மதிப்பில் முக்கியமான சாலைப் பகுதியில், இரண்டு இடங்களில் செப்பனிடும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

கேரளத்துக்குச் செல்வதற்காக இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img