காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்பட்டார்.மேலும் அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தன் துவிவேதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிரடியாக நீக்கம் தொடர்பாக விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சோனியாவும், ராகுலும் எனக்கு பதவி வழங்கினார்கள். ராகுலுக்கு நெருக்கடி கொடுத்து என் மீது நடவடிக்கை எடுக்க வைத்து இருக்கிறார்கள். தவறு செய்த இளங்கோவனை விட்டு விட்டு என் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது பற்றி சோனியா, ராகுலை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்றார்.
விஜயதாரணி மேலும் கூறுகையில் எனக்கு கிடைத்திருப்பது நீதியல்ல, அநீதி. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியைப் போல் தமிழ்நாட்டில் விஜயதாரணியாக நான் செயல்பட்டேன். அதை இளங்கோவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.விஜயதாரணி சட்டமன்றதிலும், வெளியிலும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தவர். தொலைக்காட்சி விவாதங்களிலும் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று காரசாரமாக பேசி வந்தார்.
விஜயதாரணிக்கு தொடக்கத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுன் அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியை . இளங்கோவன் சிபாரிசு செய்து குஷ்புவுக்கு பதவியை வாங்கி தந்ததாக கூறப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த விஜயதாரணி கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி தரவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் எவருக்கும் தெரியாதபடி சண்டையிட்டதாக சொல்லப்படுகின்றது
அதனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஜயதாரணியை சமாதானப்படுத்தும் வகையில் அவரை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்ககாங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்தாரம். இருந்தபோதிலும் விஜயதாரணி குஷ்பு இடையேயான கடும் மோதல் நீடித்தது. விஜயதாரணி மகளிர் காங்கிரஸ் தலைவியாக பொறுப்பேற்றதில் இருந்து அவர் நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவருக்கு முறையான அழைப்பு கொடுக்காமலும், போஸ்டரில் அவரது பெயரை இடம் பெறச்செய்யாமலும் தொடர்ந்து புறக்கணித்து வந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் .
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. மகளிர் காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவன் வாசலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இளங்கோவன் படம் சிறியதாக வைக்கப்பட்டு இருந்தது.அப்போது நடந்த மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இளங்கோவன் படத்தை சிறியதாக போடுவதா? என அவரது ஆதரவாளர்கள் விஜயதாரணியிடம் நேருக்கு நேராக கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் விஜயதாரணி வைத்திருந்த பேனர்களையும் சேதப்படுத்தினார்கள்.
இதனால் ஆவேசம் அடைந்த விஜயதாரணி இளங்கோவன் அறைக்கு சென்று ஆவேசமாக சத்தம் போட்டு சீறினார். இளங்கோவனும் பதிலுக்கு ‘‘இங்கு சத்தம் போட வேண்டாம், வெளியே போங்கள்’’ என்று கண்டித்தார்.இளங்கோவன் தன்னை ஆபாசமாக திட்டியதாக விஜயதாரணி பரபரப்பு புகார் கூறினார். மேலும் விஜயதாரணி சார்பில் இளங்கோவன் மீது அண்ணா சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. பதிலுக்கு விஜயதரணி மீதும் விஜயதாரணி ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த பிரச்சினையில் அகில இந்திய தலைவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள். இதனால் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுக்களை திரும்ப பெற்றனர். என்றாலும் உள்ளுக்குள் உட்கட்சி பூசல் புகைந்து கொண்டு இருந்தது.இந்த நிலையில்தான் திடீர் என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டு புதிய தலைவராக ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தியான ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். இவர் திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான முகுல்வாஷ்னிக்கிடம் குஷ்பு நட்புரீதியாக அடிக்கடி பேசுவதால் விஜயதாரணி செயல்பாடுகள் பற்றி அடிக்கடி புகார் கூறி வந்தார். விஜயதாரணி பதவி நீக்கத்துக்கு அதுவும் நக்மா விவகாரமும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.குஷ்புவுக்கு போட்டியாக நியமிக்கப்பட்ட நக்மாவை விஜயதாரணி அனுசரித்து நக்மா பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜயதரணி கலந்து கொண்டார். ஆனால் குஷ்பு பங்கேற்கவில்லை. நக்மாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை குஷ்பு விரும்பவில்லை.
இந்த நிலையில் நக்மா ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததை இளங்கோவன் கண்டித்தார். நக்மாவுக்கு பாட்ஷாவை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியாது என்று பகிரங்கமாகவே கூறினார்.இந்த நிலையில்தான் விஜயதாரணி நீக்கப்பட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு விஜயதரணி நீக்கத்தின் பின்னணியில் இருப்பதாக விஜயதாரணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர் .


