சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை:ஆட்சியர்பி.ராமு அதிரடி

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகேஎ உள்ள சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.ராமு கூறினார்.

சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் பி.ராமு நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலியிட தடை

சிக்கலூர் சித்தபாஜி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த விழாவின்போது ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடு, கோழிகளை கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு போலீசார் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள்.

மேலும் இதை கண்காணிக்க ஒரு சிறப்பு படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த படையினர் கோவில் விழா முடியும் வரை அங்கேயே தங்குவார்கள். உதவி கலெக்டர் கவிதா ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் தலைமையில் அந்த படையினர் செயல்படுவார்கள்.

ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்

கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கடைகள் அமைக்க வேண்டும். கோவிலில் பாதுகாப்பு கருதி 10 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு 150 சிறப்பு பஸ்களை இயக்கும்படி அரசு போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பி.ராமு கூறினார்.

800 போலீசார்

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப்குமார் ஜெயின் கூறும்போது, ‘சிக்கலூர் கோவில் விழாவில், ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோவில் விழாவின்போது ஏதாவது சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவது தெரியவந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.

முன்னதாக, சிக்கலூர் கோவில் விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பி.ராமு, கூடுதல் கலெக்டர் பாரதி, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நரசிம்ம மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு குல்தீப்குமார் ஜெயின் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories