உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு: வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவும் ஒலிப்பதிவு !

Published:

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பணியாற்றும் நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் எனும் வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒலிப்பதிவின் மூலம் கூறி அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார். வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான செய்திகளை செய்தி ஊடகங்கள் வெளியிடகூடாது என்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் கூறி மிரட்டல் விடுப்பதாக பீட்டர் ரமேஷ் ஒலிப்பதிவின் மூலம் கூறியுள்ளார். மேலும் அந்த ஒலிப்பதிவில் உயர் நீதிமன்ற நீதியரசர் மீது வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது. வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த ஒலிப்பதிவுடன் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷின் புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக மற்றப்பட்டு இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

Related articles

Recent articles

spot_img