சனிக்கிழமை நேற்று காலை முதல் தாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறையில் இருந்து ராஜீவ் கொலையாளி நளினி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, தங்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்தக் கடிதத்தை எழுதவதாக கூறியுள்ளார்.
அவரது கடிதத்தில், நிரபராதியான நாங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறோம் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டோம்.
இனி, நான் உண்ணா நோன்பு இருந்து என் உயிரை துறக்க இருக்கிறேன்… – என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு வேலூர் சிறையில் இருந்து நளினி கடிதம் எழுதியுள்ளார்.