சென்னை விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பா.ஜ., கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக ச.ம.க., கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நள்ளிரவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் சரத்குமார் சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.


