இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த நவம்பர் 21ல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நிருபர் முகமது அல் க்யூ, இவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் கடந்த 94 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது. இதனிடையே வரும் ஜூன் 21ம் தேதி முகமது அல் விடுதலை செய்யப்படுவதாக இருந்தது. இது மே 21ம் தேதியாக அறிவிக்கப்பட்டது.
இதனால் உண்ணா விரதத்தை கைவிட்டு சிகிச்சைக்கு அவர் உடன்பட்டார். உலகத்தி லேயே இவ்வளவு நாள் உண்ணாவிரதம் இருந்தது இவர் மட்டுமே.


