தனது சொந்த கிராமத்துக்கு சென்ற கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியின் கார் இன்று அதிகாலை 2.45 மணியளவில் வைக்கம்-எட்டுமன்னூர் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் இருந்த கால்வாயில் சரிந்து விழுந்தது.
எனினும், தனக்கு பாதுகாப்பாக வந்த வேறொரு காரில் தனது பயணத்தை தொடர்ந்த உம்மன் சாண்டி இன்று காலை தனது கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.


