​தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் திருப்பதி கோயில் தங்கம் 3000 கிலோ முதலீடு

Published:

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மூலம் 3000 கிலோ தங்கம் விரைவில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

ஏழுமலையான் கோயிலில் உள்ள 1300 கிலோ சுத்தமான தங்க கட்டிகளை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் குறைந்த கால முதலீடாக மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு விரைவில் செய்யபடவுள்ளது. மேலும் ஸ்டேட் வங்கியில் ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் 1000 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்காண ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே இந்த 1000 கிலோ தங்கமும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 1.75 சதவீதம் வட்டி கிடைக்கும் விதமாக முதலீடு செய்யப்படவுள்ளது. இதே போல் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய கலப்பட தங்க நகைகள் 1400 கிலோ உள்ளது. இதனை மும்பையில் உள்ள மிண்டிற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தமான தங்ககட்டிகளாக மாற்றப்படவுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img