தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலமாக விளங்குகிறது: ஜெயலலிதா பெருமிதம்

Published:

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.193 கோடியே 26 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, “தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் குறைகளை போக்க அம்மா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். 

Related articles

Recent articles

spot_img