சென்னை:
விஜயகாந்த்க்கு திமுக., காத்திருக்கக் கூடாது என்று சொன்னது சுப.வீ.யின் சொந்தக் கருத்து என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பிறந்தநாளைக் கொண்டாடவில்லையா? என்னும் கேள்விக்கு, ’சர்வாதிகாரமாகவும், ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளியும் இருக்கும் நீதியற்ற ஆட்சியை அப்புறப்படுத்துவதே தனது பிறந்தநாளுக்கான உறுதிமொழி. அதற்காக, கட்சித் தொண்டர்கள் பாடுபடவேண்டும்’ என்று கூறினார்.
திமுக, தனித்தே 200 இடங்களிலும் போட்டியிட வேண்டும்; விஜயகாந்துக்குக் காத்திருக்கக் கூடாது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளாரே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ’அது அவருடைய சொந்தக் கருத்து. அவர் திமுக-வின் உறுப்பினரல்லர். தனியாக ஒரு இயக்கத்தை நடத்திவருபவர். அது பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.


