லயோலா.. அவதூறு கிளப்பி… பின் மன்னிப்பு கேட்டால் போதும்! வழக்கு தள்ளுபடி!

Published:

loyola college 1 - 2026

எத்தகைய அவதூறுகளையும் கிளப்பி விட்டு விட்டு, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டால் போதும்… வழக்கில் இருந்து விடுதலை பெற்று விடலாம். இதற்கான முன் உதாரணத்தை சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த மாதம் வைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி, ஹிந்து மதத்தினரின் மனத்தைப் புண்படுத்தின என்றும், தேசிய சின்னங்களை அவமதித்து, ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன என்றும் இந்த சர்ச்சைக்குரிய ஓவிய கண்காட்சி விவகாரத்தில் லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால்,  இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி‌ செய்தது.

கல்லூரி முதல்வர், ஓவியர்கள் மீது நடவடிக்கை கோரிய தாமோதரன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு விட்டதால் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டுவிட்டது என்று அரசு தெரிவித்தது என்றும் அதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப் படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது,.

இந்த விவகாரத்தில், தமிழக அரசின் பதிலில் கல்லூரி மன்னிப்பு கேட்டதால், சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img