சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, நேர்காணல் நடத்தினார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், இன்று நேர்காணல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


